search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பேரணி"

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார். அங்கு பெண்மணியிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து அருகில் இருந்த பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என கூறினார்.

    இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    • வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
    • காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிராக்டர் பேரணி தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது.

    அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    டிராக்டர்கள் அணி வகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் நர்மதா, காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் பாலின வன்முறை தவிர்த்தலுக் கான உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம். பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். பேரணியில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்னபால் சாந்தி, பெண்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒன் ஸ்டாப் சென்டர் பணியா ளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    தேனி:

    ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது,

    பெண்களுக்கு எதிரான மற்றும் மனரீதியான துன்புறுத்தலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நமது சுற்றுப்புறங்களில் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. பெண்கள் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வெளியில் சொல்வது கிடையாது, பாதிப்பு அதிகமான பிறகு தான் வெளியில் சொல்கிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக,

    தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஒன்ஸ்டாப் சென்டர் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர அழைப்புகளில் தொடர்பு கொண்டு இதன் மூலம் பலர் தீர்வு காணப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நல்ல சூழ்நிலை உருவாவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருமணமான பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் தற்பொழுது குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர்களுக்கு இதுபோன்ற மனநிலை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    இதையொட்டி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது என பேசினார்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணி

    திருவட்டார் :

    இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சிற்றாறு பகுதியில் இந்தியா மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை சார்பில் குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட்சிங் தலைமையில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணியும், அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இதில் உணவு, யோக பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான உடல், மனம், ஆன்மா போன்ற சாராம்சங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. நோய் நிலையில் கடைபிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    • பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கபிலர் மலை வட்டார வளமைய பயிற்றுநர் வினோதா, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியைகள் ஜீவா, மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி இந்தியன் வங்கி, மின்சார வாரிய சேமிப்புக் கிடங்கு, சரளைமேடு, அரசுப் பொது மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக சுற்றுச்சூழல் மன்ற மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத் தூய்மை. தேவையற்ற மரக் கிளைகளை வெட்டி அகற்றுதல், கட்டிட மேல் தளங்களில் உள்ள ஈரக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஆசிரியர் வழிகாட்டுதலில் பேரில் பாதுகாப்பான முறையில் மேற்கொண்டனர். முடிவில் சாரண ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் நவம்பர் 14-ந்தேதி தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20-ந்தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மேல்நிலை ப்பள்ளியில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • குழந்தைகள் தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைைமையில் அதிகாரிகள் உறுதிெமாழியினை ஏற்றுக் கொண்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வண்ணம் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சமூகப் பாதுகாப்புத்து றையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி- சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதேவழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.

    முன்னதாக, மாவட்ட அலுவலகத்தில் குழந்தைகள் தின உறுதிமொழி கலெக்டர் கி.சாந்தி, தலைமையில் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, சமூகநல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம் மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துக்கொண்டனர்.

    • விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில், நவ.14-

    குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவிகள், ஹோலிகிராஸ் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி பால சுப்பிரமணியன், சமூக நலத்துறை அதிகாரி சரோ ஜினி, குழந்தைகள் அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×